CHAT NANBHARKAL

SIMPLY TYPE TAMIL FONT





PRIVATE CHAT

DISCLAIM

All images and videos posted in this blog were searched on the internet. Anyhow any of the posting is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.
Email us to : chatnanbharkal@gmail.com
Friday 25 March 2011

சுவையான நகைசுவைகள்

==============================================ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
நபர் : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
ஓவியர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”


==============================================



தபால்காரர் : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
நபர் : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”


==============================================



நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
நண்பர் 2: “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
நண்பர் 2: “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”


==============================================

நட ராஜா.. நீ 'நட' ராஜா


டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்?


நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு எழுபது ரூபாயா ஏத்திட்டாப் போதும்.


==============================================

அந்தக் காலம்.. இந்தக் காலம்


குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?


சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.


அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!


==============================================

ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம்.


-


-


-


என்ன கத்துச்சு?


“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே...


==============================================

மனம் திறந்த பாராட்டு!


ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?


சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.


==============================================

ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!


ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!


ஏன்.. என்ன பிரச்சினை?


எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!


==============================================

ஜொள்ளு 50%; லொள்ளு 50%


உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?


தெரியலியே!


உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.


==============================================

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு
ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.
ஆச்சரியமா இருக்கு...


பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?


துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில
படமே போடல ஸார்..அது தான்...!


==============================================

சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?


சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.


==============================================

காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..


காதலி ; போய் தூக்குல தொங்கு..!


==============================================

என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..


அவ்வளவு புத்திசாலியா..?


இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..! 


==============================================

ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு
பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..


அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு
நேரம் என்னய்யா பண்ணினே..?


சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!


==============================================

ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?


சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்...


==============================================

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"


==============================================

மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"
கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"


==============================================

இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"


==============================================

இரு நண்பர்கள், பார்டியில்...
ந1 : "என் மனைவி தேவதை! "
ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"


==============================================

நிச்சயத்தின்போது...
மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"
அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"


==============================================

1 comments:

Chat Nanbharkal said...

Supperrrrrrrrrrrrrrrr

Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.

Viewers

Viewers Counter