DISCLAIM
All images and videos posted in this blog were searched on the internet. Anyhow any of the posting is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.
Email us to : chatnanbharkal@gmail.com
Email us to : chatnanbharkal@gmail.com
Friday 25 March 2011
==============================================
தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 'இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க'. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், 'அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..'.
அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 'என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?'. அதுக்கு அமைச்சர், 'அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..' என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, 'எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..'. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், 'ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..' என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.
==============================================
ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.
ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்...
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!!
==============================================
அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்.........
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?
அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்...பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..
சாப்பிட்டு முடித்த பிறகு...
அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..
மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்...
அப்பா:- ??????????!!!!
கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா..
==============================================
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.
ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்:- முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்:- முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்:- ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்:- சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...
==============================================
பள்ளியில் டீச்சர் மாணவனிடம் கேட்கிறார்...
டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ...?
மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?
டீச்சர்:- ?????????!!!!!!!!!!!
==============================================
ஒருவன்:- எனக்கும் ஏன் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை..வந்த கோவத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்துட்டேன்.
இன்னொருவன்:- உங்க பொண்டாட்டிய மிதிச்சிட்டு வந்துடீங்களா..பலே..பலே...
ஒருவன்:- நீ வேற..நான் என் சைக்கிள சொன்னேன்...
==============================================
ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா...
பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...
பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....
பொண்ணு:- டேய்...டேய்...
(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)
பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..
பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..
பையன்:-?????!!!!!!!!!
==============================================
ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
சர்தார்:- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க...
==============================================
ஜோசியர்:- உங்க தோஷம் நிவர்த்தி ஆகணும்னா "36" வயசு பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சிக்கணும்..
சர்தார்:- ரெண்டு "18" வயசு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சிக்கலாமா?
ஜோசியர்:- நாலு "9 "ஐ கூட நீ கல்யாணம் பண்ணிக்கலாம்..
சர்தார்:- ?????!!!!!!!!
==============================================
முதலிரவு அறையில் புது கணவன் மனைவி...
கணவன்:- உங்க அப்பா ரோடு காண்ட்டிரக்டரா இருக்கலாம், அதுக்காக இப்படி நம்மல அசிங்கம் பண்ண கூடாது..
மனைவி:- அப்படி என்ன பண்ணிட்டார்?
கணவன்:- முதலிரவு அறையின் கதவில போர்டு மாட்டி வச்சிருக்காராம்..என்னான்னு தெரியுமா.."உள்ளே ஆட்கள் வேலை செய்கிறார்கள்" அப்படின்னு...மானம் போகுது...
மனைவி:- ???????
==============================================
பெத்த பொண்ணுக்கும் பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்ன தெரியுமா?
ரெண்டையும் கட்டி ஒப்படைக்கிற வரைக்கும் ஒரே தலைவலி தான்
பெத்த பையனுக்கும் பரீட்சை பேப்பருக்கும் இருக்கிற ஒற்றுமை என்ன தெரியுமா?
ரெண்டையும் திருத்தவே முடியாது...ரொம்ப கஷ்டம்..
==============================================
காதலி:- நம்ம காதலுக்கு வீட்டுல சம்மதம் சொன்னா கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்..
காதலன்:- ரெண்டும் ஒண்ணு தானே..
காதலி:- ??????
==============================================
தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..
1. 'கில்லி' னு சொல்லிட்டு உள்ள போன கபடி ஆடுறத காமிச்சாங்க..
2.'போக்கிரி'ல போலீஸ்னு சொல்லிட்டு பொறுக்கிய காமிச்சாங்க..
3.'அழகிய தமிழ் மகன்' னு சொன்னங்க, ஆனா படம் முடியற வரை அது யாருனே சொல்லல..
4.'குருவி' னு சொன்னங்க, தியேட்டர்ல காக்க குருவி எதுவும் இல்ல..
5.'வேட்டைக்காரன்' னு சொன்னங்க, பார்த்தா ஆட்டோகாரனை காமிச்சாங்க..
தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..
==============================================
டாக்டர்:- ச்சே...இவ்ளோ கஷ்டப்பட்டு ஆப்பரேஷன் பண்ணியும் பேஷண்ட காப்பாத்த முடியலியே..
நர்சு:- லூசு..நீ பண்ணது ஆபரேஷன் இல்ல, அதுக்கு பேர் போஸ்ட் மார்ட்டம்..
டாக்டர்:-???????!!!!!!!!!!!
==============================================
Labels:
சுவையான நகைசுவைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment